Sunday, February 1, 2009

வார்த்தை நின்றுபோன உதடொன்றின் உச்சரிப்பு

யாரடிச்சும் வலிக்கவில்லை
நானடிச்சு வலிக்குதடி
உன் பார்வை
இழை பாய்ந்து
என் தொண்டைக்குள்
முடிச்சொன்று இறுகுதடி

இதுவரை என்ன நினைத்தாய்
இப்போது என்ன நினைக்கிறாய்
இனி என்ன...
முக்காலமும்
என் மூளைக்குள்
குமைந்துகொண்டு
சிக்கி என்னை சிறை வைக்குதடி

எனக்கென்ன உரிமை
அடம்பிடித்த உன்னை
அறைந்து அடக்க..
பச்சைக் குழந்தையா நீ, இல்லை
பாசமுள்ள பைங்கிளியா
நீ எனக்கு.
ஏதும் நினைக்கவில்லை நான்
நீயும் எதுவும் சொல்லவில்லை

இப்போதும்
நோகுதடி மனசு
உன் கண்களில்
அவிழ்ந்து கொட்டிய
முந்திரிகை முத்துக்களை
நினைக்க

இப்போதும்
இனிக்குதடி
நீ அழ
என் இருதய வேர்
காய்ந்ததை நினைக்க

சிதறிய
எம் இருதயத் துண்டுகளின்
பிரியத்தை சேகரித்து
இன்பம் செய்வோம் - வா

உடைந்த
இருதயத்தை வைத்தே
இன்னும் பெரிய
அன்பு செய்ய முடியும்
தயங்காமல் வா

1 comment:

rasha said...

anbu enbathu kalaththal aziyathathu. thayavu seithu pirinthu pona anbai ninaithu sornthu poogamal thairiyamaga mun nooki sellavum. vetri nichchayam.