கண்மணி இரண்டு
கரைந்து கடலான சோகம்
தேகமே துளியாகி
சோகமாய் சொரிந்த மாதம் - எனக்கு
நண்பா நீ
உயிர் வறண்டு போனாயாமே
நாலு வார்த்தை
இல்லை
ஒரு வரி எழுத
எங்கே
என்னைச் சுற்றுகிறது
நம் வசந்தகாலம்
என் வாலிப
வற்றா நதியில்
உன் சுதி மட்டும்
சத்தமாய் கேட்க
சந்தமிழந்து போய்
சமாதியில் உறங்குகிறாய்
நீ
வண்ணங்களை நிறமாக்கி
பிரித்துப் பிரித்து
இதயத்தில் விழுத்தினேன்
இறணத்தில் இருந்து எழுந்து
நீ நீறாய் மிஞ்சிய
நிமிடம் மட்டும் மனசில்
நேசமாய் மிஞ்சுதடா
உன் கொல்லைப் புறத்தெரு
பள்ளிப் பருவ நாட்கள்
எல்லாம் ஞாபகத்திலிருந்தும்
கடைசியாய் பார்த்த
உன் முகம் மட்டும்
கண்ணுக்குள் மின்னுதடா
இரண்டாம் சாமம்
இளவரசிகளின் கனவு
இதற்குப் பிறகும்
உன் நினைவுகளிற்கிறைக்க
நீர் - என்
கண்களில் கனக்குதடா
இறப்போர் யாவரும்
துஞ்சுவர் - புரியும்
நீ பாதியில் பரமண்டலம்
போனகதை பற்றி
யாருக்கென்ன புரியும்
சாவின் செய்தி
உயிரின் முற்றுப்புள்ளி
எனது பதில்
சாவிர்குப் பிறகும்
ஒரு உயிர்
ஊற்றிய உணர்வு கொஞ்ச
உணர்வு நரம்புகளை
நனைக்காமலா போகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment