என்னில்
குறை என்ன கண்டாய்
கோதை மலர்த் தோழி
ஆயிரம்
அம்பு வீசி
என்னில் சினந்ததே
உன் பார்வை
மூன்றாம்
பிறை நிலவு
முகம்
சூரியனாய் சுட்டதே
இறுதியாக
கூரிய உன்
வார்த்தை ஆணிகள்
கழுமரச் சிலுவையில்
என்னை அறைந்துபோனதே
மூர்க்க
யானை ஒன்றினால்
துவசம் செய்யப்பட்ட
ஊரைப்போல
குலைந்துபோய்க் கிடக்கிறேன்
நான்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகளால்
குத்துண்டு குத்துண்டு
பட்ட காயங்களின்
எரிவோடு
சுயநலப் பூதமொன்று
எனக்குள்
அலைந்து திரிவதாய்...
அதன் நான்கு சுவர்களுக்குள்
நான்
அடையுண்டு கிடப்பதாய்...
சீற்ற சிங்கமொன்று
என்னை சீண்டி விடுவதாய்...
சிலவேளை
ஊதாரி போல என்
கோபங்களை நான்
செலவளித்துவிடுவதாய்...
நீ சாட்டிய
குற்றங்களுக்காக
கம்பியேயில்லாத
கூண்டொன்றில்
நிற்கிறேன் நான்
இத்தனையும்
யாரையும் புரிந்துகொள்ளாமல்
என்னை மட்டுமே
தியானித்துக்கொண்டு
நான் இழைத்தவைகளாம்
அன்றொருநாள்
பேசாதே என்றாய்
கவிதை மட்டுமே
பேசத்தெரிந்த உன்
விழிகள்
கத்தி கொண்டு துரத்த
அப்போதே - என் மனசு
குத்திக் கிழிந்த
கந்தலாய்
சாலை ஓரத்தில்
கிடந்தை நீ
பார்க்காமலா போனாய்
நீ
கடந்து போகிறாய்
பூவைப்போல் இருந்த
உன்னை
என் மனசில் இருந்து
பிடுங்கிக்கொண்டு
நீ இல்லாத
வெறுமை ஒரு
மலையின் சுமையாய்
என் தலைமீது கனக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
உன்னைத்தேடி
வருகிறேன் நான்
உன்னை மீண்டும், என்மீது
நிரவிக்கொள்வதற்காக அல்ல
ஒரு வார்த்தை
சொல்ல வேண்டும்
நன்றி
நீ காட்டிய
அக்கறைக்கும் அன்பிற்கும்
Sunday, February 1, 2009
வார்த்தை நின்றுபோன உதடொன்றின் உச்சரிப்பு
யாரடிச்சும் வலிக்கவில்லை
நானடிச்சு வலிக்குதடி
உன் பார்வை
இழை பாய்ந்து
என் தொண்டைக்குள்
முடிச்சொன்று இறுகுதடி
இதுவரை என்ன நினைத்தாய்
இப்போது என்ன நினைக்கிறாய்
இனி என்ன...
முக்காலமும்
என் மூளைக்குள்
குமைந்துகொண்டு
சிக்கி என்னை சிறை வைக்குதடி
எனக்கென்ன உரிமை
அடம்பிடித்த உன்னை
அறைந்து அடக்க..
பச்சைக் குழந்தையா நீ, இல்லை
பாசமுள்ள பைங்கிளியா
நீ எனக்கு.
ஏதும் நினைக்கவில்லை நான்
நீயும் எதுவும் சொல்லவில்லை
இப்போதும்
நோகுதடி மனசு
உன் கண்களில்
அவிழ்ந்து கொட்டிய
முந்திரிகை முத்துக்களை
நினைக்க
இப்போதும்
இனிக்குதடி
நீ அழ
என் இருதய வேர்
காய்ந்ததை நினைக்க
சிதறிய
எம் இருதயத் துண்டுகளின்
பிரியத்தை சேகரித்து
இன்பம் செய்வோம் - வா
உடைந்த
இருதயத்தை வைத்தே
இன்னும் பெரிய
அன்பு செய்ய முடியும்
தயங்காமல் வா
நானடிச்சு வலிக்குதடி
உன் பார்வை
இழை பாய்ந்து
என் தொண்டைக்குள்
முடிச்சொன்று இறுகுதடி
இதுவரை என்ன நினைத்தாய்
இப்போது என்ன நினைக்கிறாய்
இனி என்ன...
முக்காலமும்
என் மூளைக்குள்
குமைந்துகொண்டு
சிக்கி என்னை சிறை வைக்குதடி
எனக்கென்ன உரிமை
அடம்பிடித்த உன்னை
அறைந்து அடக்க..
பச்சைக் குழந்தையா நீ, இல்லை
பாசமுள்ள பைங்கிளியா
நீ எனக்கு.
ஏதும் நினைக்கவில்லை நான்
நீயும் எதுவும் சொல்லவில்லை
இப்போதும்
நோகுதடி மனசு
உன் கண்களில்
அவிழ்ந்து கொட்டிய
முந்திரிகை முத்துக்களை
நினைக்க
இப்போதும்
இனிக்குதடி
நீ அழ
என் இருதய வேர்
காய்ந்ததை நினைக்க
சிதறிய
எம் இருதயத் துண்டுகளின்
பிரியத்தை சேகரித்து
இன்பம் செய்வோம் - வா
உடைந்த
இருதயத்தை வைத்தே
இன்னும் பெரிய
அன்பு செய்ய முடியும்
தயங்காமல் வா
மரணம் விழுங்கிய தோழன்
கண்மணி இரண்டு
கரைந்து கடலான சோகம்
தேகமே துளியாகி
சோகமாய் சொரிந்த மாதம் - எனக்கு
நண்பா நீ
உயிர் வறண்டு போனாயாமே
நாலு வார்த்தை
இல்லை
ஒரு வரி எழுத
எங்கே
என்னைச் சுற்றுகிறது
நம் வசந்தகாலம்
என் வாலிப
வற்றா நதியில்
உன் சுதி மட்டும்
சத்தமாய் கேட்க
சந்தமிழந்து போய்
சமாதியில் உறங்குகிறாய்
நீ
வண்ணங்களை நிறமாக்கி
பிரித்துப் பிரித்து
இதயத்தில் விழுத்தினேன்
இறணத்தில் இருந்து எழுந்து
நீ நீறாய் மிஞ்சிய
நிமிடம் மட்டும் மனசில்
நேசமாய் மிஞ்சுதடா
உன் கொல்லைப் புறத்தெரு
பள்ளிப் பருவ நாட்கள்
எல்லாம் ஞாபகத்திலிருந்தும்
கடைசியாய் பார்த்த
உன் முகம் மட்டும்
கண்ணுக்குள் மின்னுதடா
இரண்டாம் சாமம்
இளவரசிகளின் கனவு
இதற்குப் பிறகும்
உன் நினைவுகளிற்கிறைக்க
நீர் - என்
கண்களில் கனக்குதடா
இறப்போர் யாவரும்
துஞ்சுவர் - புரியும்
நீ பாதியில் பரமண்டலம்
போனகதை பற்றி
யாருக்கென்ன புரியும்
சாவின் செய்தி
உயிரின் முற்றுப்புள்ளி
எனது பதில்
சாவிர்குப் பிறகும்
ஒரு உயிர்
ஊற்றிய உணர்வு கொஞ்ச
உணர்வு நரம்புகளை
நனைக்காமலா போகும்.
கரைந்து கடலான சோகம்
தேகமே துளியாகி
சோகமாய் சொரிந்த மாதம் - எனக்கு
நண்பா நீ
உயிர் வறண்டு போனாயாமே
நாலு வார்த்தை
இல்லை
ஒரு வரி எழுத
எங்கே
என்னைச் சுற்றுகிறது
நம் வசந்தகாலம்
என் வாலிப
வற்றா நதியில்
உன் சுதி மட்டும்
சத்தமாய் கேட்க
சந்தமிழந்து போய்
சமாதியில் உறங்குகிறாய்
நீ
வண்ணங்களை நிறமாக்கி
பிரித்துப் பிரித்து
இதயத்தில் விழுத்தினேன்
இறணத்தில் இருந்து எழுந்து
நீ நீறாய் மிஞ்சிய
நிமிடம் மட்டும் மனசில்
நேசமாய் மிஞ்சுதடா
உன் கொல்லைப் புறத்தெரு
பள்ளிப் பருவ நாட்கள்
எல்லாம் ஞாபகத்திலிருந்தும்
கடைசியாய் பார்த்த
உன் முகம் மட்டும்
கண்ணுக்குள் மின்னுதடா
இரண்டாம் சாமம்
இளவரசிகளின் கனவு
இதற்குப் பிறகும்
உன் நினைவுகளிற்கிறைக்க
நீர் - என்
கண்களில் கனக்குதடா
இறப்போர் யாவரும்
துஞ்சுவர் - புரியும்
நீ பாதியில் பரமண்டலம்
போனகதை பற்றி
யாருக்கென்ன புரியும்
சாவின் செய்தி
உயிரின் முற்றுப்புள்ளி
எனது பதில்
சாவிர்குப் பிறகும்
ஒரு உயிர்
ஊற்றிய உணர்வு கொஞ்ச
உணர்வு நரம்புகளை
நனைக்காமலா போகும்.
Subscribe to:
Posts (Atom)
