Friday, September 5, 2008

ஒரு சொல் வெற்றிடம்........

ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.

அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.

ஏதோ ஒரு பொழுதிலேனும்
அதற்கான
சரியான பதிலை - அவள்
மனக்காகிதத்தில் எழுதியிருக்கலாம்.
அதை காலத்தெருவில்
ஏதோ ஒரு தொலைவில்
தொலைத்துவிட்டிருக்கலாம்.

நினைவெங்கும் பசுமை
படர்ந்து கிடக்கிறது.
அவளுக்கே என்று
தந்துவிட்ட
என் இருதயத்தை
எழுதி கிழித்திருக்கலாம்.
ஏனோ
(அவளே எழுதாமல்)
இடம் விட்டிருக்கிறாள்.
யாரோ ஒருத்தி எழுதுவதற்காக
அந்த ஒரு சொல்
வெற்றிடத்தை..............

2 comments:

ப. அருள்நேசன் said...

முளுதாகப் போட்டிருக்கலாம், பரவாயில்ல நல்லா இருக்கு

rasha said...

yaaro oruththi ezuthuvathatkaaga vitta antha oru sol vetridaththai
nirappa kaaththu irupavalukku koduthu parungal vetridam thaanaga nirappa padum.............